பெண் எனும்
பொக்கிஷம் . . .
காதலித்து நீ பெற்ற
காதலியானாலும்
திருமணம் பேசி
உன்னவளை
இரு வீட்டார்
மணக்க வைத்தாலும் . .
திருமணக்கும் போது
பெண்ணவள் மனைவி
எனும்
மகிமை பெறுகிறாள் . . .
நீ வாழ்ந்த கடந்த காலம்
அவள் மறந்து விட்ட
கஷாயம் . . .
இனிமேல் நீ
அவளுக்காய்
வாழ இருக்கும்
காலம் அவள்
சுவைக்க இருக்கும் தேன் . . .
தேக்கி வைத்த
மொத்த அன்பையும்
அவள் அள்ளித்தர
எதிர்பார்ப்பது
உன்னிடம் . . .
நீ அவள் இதயம் தாண்டி
நேசித்தால் அன்றி
பெற முடியாது
அந்த பாசத்தை
அவளிடம் . . .
அன்பு எனும்
பெயரில் நீ இடும்
கட்டளைகள்
அவள் எதிர் பார்த்த
வாழ்க்கைக்கு
நீ இடும்
முட்டுக்கட்டைகள் . . .
தேவை அறிந்து
அவள் நடப்பாள்
தேவை இன்றி
நீ நடத்தாது இரு . . .
இது அன்பல்ல
அடிமைத்தனம் . . . !
எதைவேண்டுமானாலும்
அவளுக்காய்
விட்டுக்கொடு
எதுக்காகவும்
அவளை விட்டுக்கொடுக்காதே . .
இந்த உலகில்
நீ ஒரு
ஆளாய் இருக்கலாம் . . .
ஆனால் அவளுக்கு
உலகமே
நீயாய் இருப்பாய். . .
உன்னோடு மட்டுமே
அவள் உடல் தாண்டி
உறவை பேணுவாள் . . .
நீ அதற்கும் மேல்
உயிர் தாண்டி
உறவை பேணு . . .
சந்தேகம் எனும் பேய்
சந்ததிக்கு கேடடா . . .
சாமர்த்திய
வாழ்வுக்காய்
சாதிக்க தேவை
இல்லை . . .
புரிந்துணர்வே
போதும் . . .
வாழ்க்கை சொர்க்கமாகும் . . .
அன்புடன்
அன்வாஸ் . . .
எதைவேண்டுமானாலும்
ReplyDeleteஅவளுக்காய்
விட்டுக்கொடு
எதுக்காகவும்
அவளை விட்டுக்கொடுக்காதே .//
எல்லா வரிகளும் சூப்பர்தான். இந்த வரிகள் அதிலும் விசேஷம்.
நன்றி தோழா உங்கள் கருத்துக்கள் என்னை இன்னும் எழுதத் தூண்டுகிறது . .
ReplyDelete