பொய்
என்று உணர்ந்து
உண்மை பேசும் மனிதர் சிலரே . . . !
உண்மை
என்று சொல்லி
பொய் பேசும் மனிதர் பலரோ . . . ?
பொய்யால்
துன்பம் நிகழும் போது . . .
உண்மைகளின்
கொலைகாரன் இந்த பொய் . . . !
நன்மைகள் நிகழும் போதோ ?
அடுத்தவனின் கவனம் ஈர்க்க
சொல்லும் பொய் . . . !
அவன்முன் மரியாதைக்காக
சொல்லும் பொய் . . . !
எதிர்பார்ப்புகள்
நிறைவேறா சமயம்
திருப்திக்காக சொல்லும் பொய் . . . !
பயத்தில் இருப்பவனின்
தைரியம் வரவழைக்க
சொல்லும் பொய் . . . !
சிரிக்க வைக்க . . .
சிந்திக்க வைக்க . . .
பயப்பட வைக்க . . .
பரிகாசம் செய்ய . . .
வினா தொடுக்க . . .
விலை குறைக்க . . .
சொல்லும் பொய்கள் . . . !
கடன் பட்டு
கொடுத்தவன் குடைக்கும் போது
நாளை தருவேன் எனும் பொய் . . . !
எல்லாமே குற்றங்கள் ஆகுமோ . . . ?
களவெடுத்தவன் கதறல்
எடுத்ததை
எடுக்கவில்லை . . . !
கொலைகாரன் குமுறல்
செய்ததை
செய்யவில்லை . . . !
சாட்சிகளின் மௌனம்
பார்த்ததை பார்க்கவில்லை . . . !
கேட்டதை கேட்கவில்லை . . . !
விபச்சாரம் புரிந்தவனுக்கோ
அது என்னவென்று தெரியவில்லை . . . !
எனும் பொய்களெல்லாம்
நியாயங்கள் ஆகுமோ . . . ?
with love
Anwas. . .
No comments:
Post a Comment