கண்ணீர் எனக்கு புதியதல்ல . . .
எனக்கு வந்திருந்த சோகங்களை
வழிமறித்து கேட்டுப்பார் . . . !
என் கண்களை
மழை போல் நனைத்த கதை அது சொல்லும் . . . !
குடை போல வந்தாயே கண்ணே . . .
என் வாழ்வில் . . . !
தரிசாய் கிடந்த என் உள்ளம்
பசுமை கொள்ள வைத்தயே . . . !
உன் மேல் எனக்கு "காதல்"
உன்னைக் காண முன்பே
வந்திருந்ததாய் . . .
உன்னை முதன் முதலாய் காணும் போது
நான் உணர்ந்தேன் . . . !
உயிரே ஜென்மங்கள் மீது
நம்பிக்கை இல்லை . . .
என்றாலும்,
போன ஜென்மத்து காதல்
உனக்கும் எனக்கும் பிறந்து இருந்ததா ?
மகிழ்ச்சிகளின் உச்சம்
உள் நெஞ்சில் ஒரு சுகமான சூடு
பட்டாட் போல . . .
சுல்லென்ற இதமான வலி
உன் காதல் கொடுத்தது . . . !
இத்தனை நாள் வரை
இப்படியொரு சந்தோஷம் கொண்டதில்லை . . .
நான்ஏன் பிறந்தேன் என
என்னிடம் பலமுறை கேட்டுக்கொண்டாலும்,
பதில் மட்டும்
தெரியாமல் இருந்தேன் . . .
இந்தக் காதல் எனக்குள் வரும் வரை . . . !
நீ என்னை எதேர்ச்சையாய் பார்த்தாலும்,
அதைக்கூட
நிஜமாய் எடுத்துக்கொண்டு . . .
உயரப் பறந்தேனே நான்
ஒரு தலையாய் உன்னை காதலிக்கும் போது . . . !
நீயும் என்னுடன் காதல் கொண்டபின் ,
என்னை
திரும்பி திரும்பி பார்ப்பாயே . . .
அந்த அழகிய தருணங்களுக்கு
அர்த்தம் கொடுக்கவே உயிரே . . .
உன்னை என் காதலை எழுதுகிறேன் . . .
இல்லை செதுக்குகிறேன் . . . !
ஒற்றைப்புல்லுக்கு
அதிகாலையில் அழகு சேர்த்த பனித்துளி . . .
வடிந்துவிழும் அழகிய தருணம் போல்
எனக்கு அழகு சேர்த்த
காதல் பனித்துளி
உன்னில் இந்த மண்ணில் வீழ்ந்தது . . .
இதை தாங்கிக் கொள் என
சொல்லாமல் சொன்னேன் . . .
நீயும் தாங்கிக் கொண்டாய்
என்னை என் காதலை . . . !
இந்த உலகில்
எத்தனை உண்மைக்காதலர்கள்
வாழ்ந்தாலும்,
எனது காதலே புனிதமானது என
என்னுள் ஒரு இறுமாப்பு கொள்ள வைத்த
நாம் காதல் . . .
கடவுளுக்கு அடுத்தபடியாக
புனிதம் என்பதை
போற்றி நின்றது . . . !
ஒரு ஜீவன் உயிர் வாழலாம் . . .
தனியே உறவாட முடியாது . . .
உறவாட வேண்டில் ,
இரு ஜீவன் ஒரு ஜீவனாகும்
வித்தை பயில வேண்டும் . . .
இது காதல் வித்தை கண்ணே . . .
நீயும் நானும்
எங்கே கற்றோம் இதை ?
கற்காவிட்டாலும்,
உயிரோடு உறவாட
காதல் வித்தை ,
வித்தையாய் நிறைய பாடம்
உனக்கும் எனக்கும் சொல்லிக்கொடுத்தது . . . !
ஆரம்பக் கல்வி முத்தம் முதல் ,
அனைத்தும் இன்னும் அபூர்வம் . . .
யாரும் இதற்கு முன்
சொல்லிக்கொடுக்காத வித்தை . . .
எப்படி நான் கற்றேன் ?
நீயும் தானே . . .
நான் கனவில் மட்டுமே கண்ட
உன் அரவணைப்பு . . .
நிஜத்திலுமா ?
என் இரு கை சிறைக்குள்
நீ எனை கைது செய்துகொண்டிருந்தாய் . . . !
எத்தனை தவறு செய்தாலும் இந்த
சிறை கிடைக்குமா ?
என்னை இந்த சிறைக்குள்
ஆயுள் கைதியாக்கி விடு . . .
நான் சொல்லாவிட்டாலும் . . .
நீயே தீர்ப்பு கொடுத்துவிட்டாய் . . . !
பிடித்திருக்கு அன்பே இந்த தண்டனை . . . !