பிடித்திருக்கு அன்பே இந்த தண்டனை . . . !


கண்ணீர் எனக்கு புதியதல்ல . . . 
எனக்கு வந்திருந்த சோகங்களை
வழிமறித்து கேட்டுப்பார் . . . !
என் கண்களை
மழை போல் நனைத்த கதை அது சொல்லும் . . . !

குடை போல வந்தாயே கண்ணே . . . 
என் வாழ்வில் . .  . !
தரிசாய் கிடந்த என் உள்ளம் 
பசுமை கொள்ள வைத்தயே . . . !

உன் மேல் எனக்கு "காதல்"
உன்னைக் காண முன்பே 
வந்திருந்ததாய் . . . 
உன்னை முதன் முதலாய் காணும் போது 
நான் உணர்ந்தேன் . . . !

உயிரே ஜென்மங்கள் மீது 
நம்பிக்கை இல்லை . . . 
என்றாலும்,
போன ஜென்மத்து காதல் 
உனக்கும் எனக்கும் பிறந்து இருந்ததா ?

மகிழ்ச்சிகளின் உச்சம் 
உள் நெஞ்சில் ஒரு சுகமான சூடு 
பட்டாட் போல . . . 
சுல்லென்ற இதமான வலி 
உன் காதல் கொடுத்தது . . . !

இத்தனை நாள் வரை 
இப்படியொரு சந்தோஷம் கொண்டதில்லை . . . 

நான்ஏன் பிறந்தேன் என 
என்னிடம் பலமுறை கேட்டுக்கொண்டாலும்,
பதில் மட்டும் 
தெரியாமல் இருந்தேன் . . . 
இந்தக் காதல் எனக்குள் வரும் வரை . . . !

நீ என்னை எதேர்ச்சையாய் பார்த்தாலும்,
அதைக்கூட 
நிஜமாய் எடுத்துக்கொண்டு . . . 
உயரப் பறந்தேனே நான் 
ஒரு தலையாய் உன்னை காதலிக்கும் போது . . . !

நீயும் என்னுடன் காதல் கொண்டபின் ,
என்னை 
திரும்பி திரும்பி பார்ப்பாயே . . . 
அந்த அழகிய தருணங்களுக்கு 
அர்த்தம் கொடுக்கவே உயிரே . . . 
உன்னை என் காதலை எழுதுகிறேன் . . . 
இல்லை செதுக்குகிறேன் . . . !

ஒற்றைப்புல்லுக்கு 
அதிகாலையில் அழகு சேர்த்த பனித்துளி . . . 
வடிந்துவிழும் அழகிய தருணம் போல் 
எனக்கு அழகு சேர்த்த
காதல் பனித்துளி 
உன்னில் இந்த மண்ணில் வீழ்ந்தது . . . 
இதை தாங்கிக் கொள் என 
சொல்லாமல் சொன்னேன் . . . 
நீயும் தாங்கிக் கொண்டாய் 
என்னை என் காதலை . . . !

இந்த உலகில் 
எத்தனை உண்மைக்காதலர்கள் 
வாழ்ந்தாலும்,
எனது காதலே புனிதமானது என 
என்னுள் ஒரு இறுமாப்பு கொள்ள வைத்த 
நாம் காதல் . . . 
கடவுளுக்கு அடுத்தபடியாக 
புனிதம் என்பதை 
போற்றி நின்றது . . . !

ஒரு ஜீவன் உயிர் வாழலாம் . . . 
தனியே உறவாட முடியாது . . . 
உறவாட வேண்டில் ,
இரு ஜீவன் ஒரு ஜீவனாகும் 
வித்தை பயில வேண்டும் . . . 
இது காதல் வித்தை கண்ணே . . . 
நீயும் நானும் 
எங்கே கற்றோம் இதை ?

கற்காவிட்டாலும்,
உயிரோடு உறவாட 
காதல் வித்தை , 
வித்தையாய் நிறைய பாடம் 
உனக்கும் எனக்கும் சொல்லிக்கொடுத்தது . . . !

ஆரம்பக் கல்வி முத்தம் முதல் ,
அனைத்தும் இன்னும் அபூர்வம் . . . 
யாரும் இதற்கு முன் 
சொல்லிக்கொடுக்காத வித்தை . . . 

எப்படி நான் கற்றேன் ?
நீயும் தானே . . . 

நான் கனவில் மட்டுமே கண்ட 
உன் அரவணைப்பு . . . 
நிஜத்திலுமா ?
என் இரு கை சிறைக்குள் 
நீ எனை கைது செய்துகொண்டிருந்தாய் . . . !

எத்தனை தவறு செய்தாலும் இந்த 
சிறை கிடைக்குமா ?
என்னை இந்த சிறைக்குள் 
ஆயுள் கைதியாக்கி விடு . . . 

நான் சொல்லாவிட்டாலும் . . . 
நீயே தீர்ப்பு கொடுத்துவிட்டாய் . . . !

பிடித்திருக்கு அன்பே இந்த தண்டனை . . . !

பொய்


பொய் 
என்று உணர்ந்து 
உண்மை பேசும் மனிதர் சிலரே . . . !

உண்மை 
என்று சொல்லி 
பொய் பேசும் மனிதர் பலரோ . . . ?

பொய்யால் 
துன்பம் நிகழும் போது . . .
 உண்மைகளின் 
கொலைகாரன் இந்த பொய் . . . !

நன்மைகள் நிகழும் போதோ ?

அடுத்தவனின் கவனம் ஈர்க்க 
சொல்லும் பொய் . . . !
அவன்முன் மரியாதைக்காக
சொல்லும் பொய் . . . !

எதிர்பார்ப்புகள் 
நிறைவேறா சமயம் 
திருப்திக்காக சொல்லும் பொய் . . . !

பயத்தில் இருப்பவனின் 
தைரியம் வரவழைக்க 
சொல்லும் பொய் . . . !

சிரிக்க வைக்க . . . 
சிந்திக்க வைக்க . . . 
பயப்பட வைக்க . . . 
பரிகாசம் செய்ய . . . 
வினா தொடுக்க . . . 
விலை குறைக்க . . . 
சொல்லும் பொய்கள் . . . !

கடன் பட்டு 
கொடுத்தவன் குடைக்கும் போது 
நாளை தருவேன் எனும் பொய் . . . !

எல்லாமே குற்றங்கள் ஆகுமோ . . . ?

களவெடுத்தவன் கதறல்
எடுத்ததை 
எடுக்கவில்லை . . . !

கொலைகாரன் குமுறல் 
செய்ததை 
செய்யவில்லை . . . !

 சாட்சிகளின் மௌனம் 
பார்த்ததை பார்க்கவில்லை . . . !
கேட்டதை கேட்கவில்லை . . . !

விபச்சாரம் புரிந்தவனுக்கோ 
அது என்னவென்று தெரியவில்லை . . . !

எனும் பொய்களெல்லாம் 
நியாயங்கள் ஆகுமோ . . . ?

with love
Anwas. . . 

கற்பனை



வானம் தான் எல்லையா ...

அதையும் தாண்டி
பயணிக்கும் "கற்பனை"
இல்லையா . . . ?

ஆயிரம் ஒளியாண்டு
பயணித்து காண வேண்டிய
கோள்களுக்கு,
நுண் நொடியில் பயணித்து
அதற்கு தோற்றம் கொடுக்கும்
இந்த கற்பனை . . . !

உருவம் இல்லா உணர்ச்சி இது
நீ தேடலில் இருக்கும் போது . . .
உணர்ச்சி உள்ள உருவம் இது
தேடியதை அடையும் போது . . .

திட்டங்களின் மூதாதை ,
வெளியீடுகளின் எதிர்பார்ப்பு ,
அடைவுகளின் ஆசை ,
தீர்வுகளின் தீர்க்கத்தரிசனம் ,
இந்த கற்பனை . . .

நினைப்பதையெல்லாம்
நிலை நிறுத்தி
மீண்டும் மீண்டும்
கற்பனை செய்தால்
நிஜமாகும் ஒருநாள்
கற்பனை . . . !

மர உச்சி மேல் நின்று
தேன் கூடு களைப்பவன் போல்
அச்சு இரும்பு ஆனி இன்றி
மாட்டு வண்டிலில் பயணிப்பவன் போல்
இருக்குமென்றால்
உன் கற்பனை . . .
எப்படி இருக்கும்
என் கற்பனை . . . ?

உருவம் தொடரும் நிழழுக்கு
இருள் தானா
மரணம் தரும் . . . ?
உருவமே மரணித்து போனால் . . .
ஒளி எங்கிருந்து
நிழல் தரும் . . . ?

இப்படி இருக்கிறது
நம்மவர் கற்பனை . . .

இதை மாற்ற நீ செய்
கற்பனை . . . !

மனிதனின் படைப்புக்கு
அடித்தளம் கற்பனை . .
பறவையின் சிறகு பார்த்து
பறக்க நினைத்த கற்பனை
இன்று விமானம் . . .

சந்தர்ப்பத்தை சாத்தியமாக்க
இன்றே செய் கற்பனை . . . !

வறுமை


வறுமை வசதியாய் வாழ்கிறது 
ஏழையின் வீட்டில் . . . 

இவனுக்கு எதிர் வீட்டு 
ஜன்னல்கள் வலியே 
பார்த்தால் . . . 
ஏராளம் சட்டைகள் . . . 
இவனது சட்டையை 
பார்த்தால் . . .
ஏராளம் ஜன்னல்கள் . . . !

குழந்தை கூட 
வேலைக்கு செல்கிறது . . . 
குடிசை ஓட்டை 
அடைக்க வேண்டி . . . 

இது தானா . . . ?
தொழில் வாய்ப்பு . . . 

இல்லை 
நீங்கள் சொல்லும் 
சுய தொழில் 
அபிவிருத்தி . . .

துள்ளாத மாடுகளும் 
பொதி சுமக்கிறதே . . . 

நீர் அருந்திய 
ஏழையின் வயிற்றுக்கோ 
வறுமை தெரிவதில்லை . . . 
பணக்காரன் வயிற்றுக்கோ . . . ?

பசி பட்டினி தெரிவதில்லை . . . !

ஆட்சியில் உள்ளவன்
அதிகாரத்தில் இருப்பவன் . . .
தீட்டும் திட்டங்கள் தானா . . . ?
இந்த ஏற்றத் தாழ்வு . .



எத்தனை கனவுகள் கண்டிருப்பேன் !


எத்தனை கனவுகள் கண்டிருப்பேன் !

இந்த நிமிடம் வரை . . .
கற்பனைகளோடு . . .

ஆயிரம் ஆண்டுகள்
வாழ்ந்துவிட்டேன் உன்னோடு . . .

உயிரே !
இறைவன்
ஆரம்ப வரியில்
முற்றுப்புள்ளி இடுகிறானா . . .?

பூரித்து போயிருந்த
என் உள்ளம்
வாயடைத்து போனதடி . . .
தீயினை தந்து சென்றாய்
தங்க மலரே . . .
தாங்கலையே . . .

யார் நிழல் கூட
உனைத்தொட்டால்
அதைக்கூட தாங்கிக்கொள்ளேனே . . .
நொடிப்பொழுதில்
எனை விட்டு
எங்கே என் அன்பே சென்றாய் . . . ஐயோ !

செஞ்செளித்திருந்த
மலரைப்போல் . . .
என்னருகே அமர்ந்திருந்தாயே . . . !
அடுத்த நொடி
ஆகவில்லை . . .
அதற்குள்
ஆவியாகி சென்றாயே . . . !

நோயிலே இறந்திருந்தால் . . .
நியாயமென்று நினைத்திருப்பேன் . . .
நொடிப் பொழுதில் மறைந்ததனால்
நிலை குலைந்து போனேனே . . . !


பிச்சைக்காரன் . . .


கல்லூரிப் பெண்கள் 
கூட்டமாய் போகையில்
அவர்கள் கொடுக்கும் 
நக்கல் சிரிப்பு கலந்த 
காமெடிப் பார்வை . . . 

பசங்களெல்லாம் 
பொழுது போகவில்லை 
என்றால் எனை 
நோக்கி கிண்டலாய் 
பேசும் 
அழுக்கு வார்த்தை 

அம்மா இது யாரென 
குழந்தை கேட்கையில் 
புரியாத ஆங்கிலத்தில் 
அவள் எனை நோக்கி 
சொல்லும் 
ஏளனப் பேச்சு 

பணக்காரன் 
தன் அந்தஸ்தை
உயர்த்தி காட்ட 
தானே முன் வந்து 
கொடுக்கும் 
வரட்டு நன்கொடை 

எனக்கு இளையவன் 
நான் அவனைவிட
முதிர்ந்தவன் . . . !

தெரிந்தும் . . .

அவன் போட்டு கூப்பிடும் 
வாடா போடா
வார்த்தைகள்
இவைதான் எனது 
ஒரு நாள் நாட்குறிப்பு . . . 

முன்பின் தெரியாதவன் 
அறிமுகமில்லாதவன் 
போலீஸ் காரன் 
நகரத்து வெற்று தாதா 
கடைக்காரன் 
படித்தவன் 
பாமரன் . . . !

பெண்கள்
குழந்தைகள் 
இப்படி எல்லா 
வர்க்கமும் 
கோபித்தாலும் 
சந்தோசித்தாலும் 
உணர்வுகள் 
தீர்க்கப்பட 
அடியோ அவமானமோ 
வாங்குவது தான் 
"நான்" எனும் நூலின் 
பொருளடக்கம் . . . !

திருப்பியடிக்க முடியாத
திசையிலே 
என்வாழ்க்கை பயணம் 
ஆழ்கடலில் 
துடுப்பின்றி செல்கிறது 
கரை காண 
முடியவில்லையே என்ற
ஏக்கத்தில் . . . !

நடந்துவந்த பாதைகள் 
கடலாய் மாறிவிட்டது
என் கண்ணீர் கொண்டு. . .  

எத்தனை மனக்கோட்டைகள் 
நானும் கட்டினேன் 

நான் என்ன தீர்க்கதரிசியா ?
வர இருப்பதை 
முன்கூட்டி கணிக்க 

கடல் அலை போல் 
விபத்து நிகழ்வு
வரும் 
இந்த காலையும் 
கொண்டு செல்லும் . . . 
என்று தெரிந்திருந்தால் . . . 
கோட்டைக்கு பதில் 
ஆஸ்பத்திரி கட்டி இருப்பேன் . . . !

நான் இழந்தது 
ஒரே ஒரு கால் 
இங்கே 
கிடைத்து இருப்பதோ 
மூன்று சக்கரம் 
வாழ முடியாத 
தெரு வாழ்க்கை 
அவமானம் அருவருப்பு
அழுக்கு சட்டை . . . 

கண் சிமிட்டுவதட்குள்
காட்சி மாறியதுபோல் 
மனசாட்சி இல்லாத 
உலகுக்குள் 
நானும் வந்துவிட்டேன் . . . !

இயலாதவன் இறங்கி கேட்டால் 
பெயர் பிச்சை 
இயன்றவன் புடுங்கி தின்றால் . . ?

சறுக்கி விழுபவனுக்கு 
விழுமிடம் 
எல்லாம் கள்ளி மரம் 
எனும் கயவர்கள் 
இந்த உலகில் 
வளர்ந்து இருக்கும் போது .. .

முள் குத்தத் தானே செய்யும் . . .!

தெரிந்தும் 
இரத்தக் கரைகளோடு 
எழுந்திருக்கிறேன் 
வயிற்றுக்காக . . . 
எனக்குள்ளும் 
இதயம் இருப்பதால் . . . !

இந்த உடலை நம்பி என் உயிர் இருப்பதால் . . . !