எத்தனை கனவுகள் கண்டிருப்பேன் !


எத்தனை கனவுகள் கண்டிருப்பேன் !

இந்த நிமிடம் வரை . . .
கற்பனைகளோடு . . .

ஆயிரம் ஆண்டுகள்
வாழ்ந்துவிட்டேன் உன்னோடு . . .

உயிரே !
இறைவன்
ஆரம்ப வரியில்
முற்றுப்புள்ளி இடுகிறானா . . .?

பூரித்து போயிருந்த
என் உள்ளம்
வாயடைத்து போனதடி . . .
தீயினை தந்து சென்றாய்
தங்க மலரே . . .
தாங்கலையே . . .

யார் நிழல் கூட
உனைத்தொட்டால்
அதைக்கூட தாங்கிக்கொள்ளேனே . . .
நொடிப்பொழுதில்
எனை விட்டு
எங்கே என் அன்பே சென்றாய் . . . ஐயோ !

செஞ்செளித்திருந்த
மலரைப்போல் . . .
என்னருகே அமர்ந்திருந்தாயே . . . !
அடுத்த நொடி
ஆகவில்லை . . .
அதற்குள்
ஆவியாகி சென்றாயே . . . !

நோயிலே இறந்திருந்தால் . . .
நியாயமென்று நினைத்திருப்பேன் . . .
நொடிப் பொழுதில் மறைந்ததனால்
நிலை குலைந்து போனேனே . . . !


2 comments: