அந்த பருவம் மீண்டும் வராதா ?

பழைய நினைவுகள் என்னை தீண்டுகிறது
சுகமாக !
அம்மா கிள்ளிக் கீச்சமூட்டி நான்
எனை மறந்து சிரித்த
அந்த பாலர்ப் பருவம் முதல்
தும்பி வாளில் நூல் கட்டி
சாதனைகள் செய்துவிட்ட சந்தோஷங்கள்
போல என் கோமாளித்தன விளயாட்டுக்கள்
தொடக்கம்
நண்பர்கள் கடத்தல் திட்டம் போட்டு
புளியங்காய் திருடிய நினைவுகள் வரை
ஜாபகம் வருகிறது...

திருட்டு என்றால் என்ன என்று
தெரியாத போதும் கள்ளன் போலீஸ்
விளயாட்டு
வியாபாரம் என்றால் என்ன என்று
தெரியாத போதும் ஜவுளிக்கடை
விளயாட்டு
சமைக்க தெரியவில்லை என்றாலும்
சிப்பி சிரட்டை விளயாட்டு
நாம் நடாத்திய மெய்வல்லுனர் போட்டி
நாவப்பழம் பறிக்க சென்ற ஷெட்டி மரக்காடு
காய்ந்த தரயில் உலகக் கோப்பை கிரிக்கட்
வகுப்பை கட் அடித்துவிட்டு சுற்றுலா சென்ற பக்கத்து ஊர்
அந்த வற்றிப்போன குளத்தில்
நாம் அனுபவித்த நீச்சல்
கட்டாம்பூல் எடுத்து குறிபார்த்து அடித்த மணிப்புறா
தைரியசாளி போல் திருடிய கிளிமூக்கு மாங்காய்
மாட்டிக்கிட்டு கெஞ்சிக்கூத்தாடிய ஆச்சி
வெப்ப மாற நிலளில் நாம் கூடிய மாநாடு
வீட்டுக்கு தெரியாமல் பார்க்க சென்ற சினிமா
ஒவ்வொன்றாய் ஜாபகம்
வருகிறது
அந்த பருவம்
மீண்டும் வராதா ? 

2 comments:

  1. superb... but diz znt enough for dis mourn... its true in girls life who a missin their spouse... bt pple nvr considr d girls side & their feelings... each & evry husbnds must think of their wives' needs... gud work dear.. keep it up

    ReplyDelete
  2. yes kavipriyan... and thank u for the motivation..

    ReplyDelete